Wednesday, June 30, 2010

அம்மா எப்போதும் நினைவில்

இன்று மாங்காய் ஊறுகாய் போட்டேன்.உப்பு போடும் போது என்னுடன் அம்மாவும் கூடவே இருந்து கையில் அளந்து போடுவது போல ஒரு உணர்வு.என்ன ஆச்சரியம்....உப்பு சரியாக இருந்தது.காரம்...மனம்....சுவை.....ஊறுகாயை கிளறி பாட்டிலில் போடும் போது அம்மாவின் மனம் அப்படியே.....நானே சொல்லிக்கொள்ளக்கூடாது   நிஜமாகவே அம்மாவின் கை மனம் ....அம்மா சொல்லி சொல்லி ...எனக்கும் ..அம்மா அடிக்கடி சொல்வார்கள்...குளவி கொட்டி புழுவும் குளவி ஆகி விடும் என்று...நிஜம் தான் போல....அம்மா சொல்லும் போது ஆச்சரியப்பட்டேன்   அது எப்படி சாத்தியம் என்று...
இப்போது புரிகிறது.....அம்மாவும் என்னை கொட்டி கொட்டி குளவி ஆக்கி விட்டார்கள்....
தேங்க்ஸ் அம்மா....

Monday, June 7, 2010

தென்மேற்கு பருவக்காற்று

வரலாமா ...வேண்டாமா.....
சற்று யோசித்து....தயங்கி...
இதோ...வந்தே விட்டது...
தென் மேற்கு பருவக்காற்று...
சிலு சிலுவென்று ஈரக்காற்று
யானைக்கூட்டம் போவது போல மேக ஊர்வலம்
ஜன்னலில் பதித்த முகவாயை
எடுக்கவிடாது சில்லிட்டு சுகமளிக்கும்
இரும்புக் கம்பிகள்.
எல்லோரும் தூங்கியபின்னும்
சீறி அடிக்கும் காற்று
திட்டு வாங்கிக்கொண்டு ஜன்னலைத்
திறக்க  தூண்டுகிறது.
எங்கோ உடல் மறைத்துக் கூவி குயிலும்
வசந்தம் வந்துவிட்டது என்று
அறிவிப்பு தந்து விட்டது.
இன்னும் சாரல் மழை வருமா .....
என்று ஏங்கித் தவிக்கிறது
என் வீட்டு ரோஜாத் தொட்டி....
மழையே......வா.....வா.....
வந்து விடு.
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
தொட்டிச் செடிகள்.