Wednesday, June 30, 2010

அம்மா எப்போதும் நினைவில்

இன்று மாங்காய் ஊறுகாய் போட்டேன்.உப்பு போடும் போது என்னுடன் அம்மாவும் கூடவே இருந்து கையில் அளந்து போடுவது போல ஒரு உணர்வு.என்ன ஆச்சரியம்....உப்பு சரியாக இருந்தது.காரம்...மனம்....சுவை.....ஊறுகாயை கிளறி பாட்டிலில் போடும் போது அம்மாவின் மனம் அப்படியே.....நானே சொல்லிக்கொள்ளக்கூடாது   நிஜமாகவே அம்மாவின் கை மனம் ....அம்மா சொல்லி சொல்லி ...எனக்கும் ..அம்மா அடிக்கடி சொல்வார்கள்...குளவி கொட்டி புழுவும் குளவி ஆகி விடும் என்று...நிஜம் தான் போல....அம்மா சொல்லும் போது ஆச்சரியப்பட்டேன்   அது எப்படி சாத்தியம் என்று...
இப்போது புரிகிறது.....அம்மாவும் என்னை கொட்டி கொட்டி குளவி ஆக்கி விட்டார்கள்....
தேங்க்ஸ் அம்மா....

No comments:

Post a Comment