Wednesday, December 7, 2011

அம்மா வீடு
பொழுது போகாமல் பழைய அவள் விகடன்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது ஒரு புத்தகத்தில் வாசகர் சிறுகதை என்ற தலைப்பில் அம்மா வீடு என்ற ஒரு கதையைப் பார்த்தேன். அட..எப்படி நம்ம கண்ணில் விழாமல் போனது ? என்று எண்ணிய படியே படிக்கத் தொடங்கினேன்..படிக்கப் படிக்க மலைப்பானது.என்னடா இது எல்லா பெண்களுக்குமே இந்த நிலை வரும் போல?என்று நினைத்துக்கொண்டே படித்தேன்.(கதைச் சுருக்கம் இது தான் ...திருமணத்துக்கு முன் அவள் வைத்தது தன சட்டம் என்று எல்லோரும் அவளைசுற்றியே வாழ்கை வட்டத்தை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.திருமணத்துக்குப் பின் ..அவளது அம்மா வீட்டுத் தொடர்பு ஒவ்வொன்றாக துண்டிக்கப் பட்டது.அவளது உரிமைகள் அவளைக் கேட்காமலேயே அவளை கையில் இருந்து எடுக்கப் பட்டன.அப்பா அம்மா வின் செல்ல மகள் அவர்கள் மறைவுக்குப் பின் தன துவைத்த துணிகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் மீண்டும் தான் கொண்டு வந்த பெட்டியில் அவற்றை அடுக்கும் பொது சுட்ட உண்மை வெந்நீர் கோடுகளை கன்னத்தில் வரைந்தன.யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன பையின் ஜிப்பை இழுத்து மூடினாள் கூடவே மனதிற்குள் இருந்த உரிமைக் கனவுகளையும் அழுத்தித் துடைத்தாள்)

   இந்தக் கதையைப் படித்தபின் நிதரிசனமான உண்மைகள் எப்படிச் சுடுகின்றன என்பதை உணர்ந்தேன்?பெண்களுக்கு தாய் வீட்டு உரிமை என்பது இவளவு தானா? நான் தீர்மானம் செய்து விட்டேன். என் மகள் திருமணம் ஆகி கணவன் வீடு சென்றாலும் அவளுடைய அறை எப்போதும் அவளுடையதாகவே இருக்க வேண்டும்....இருக்கும்....