Wednesday, December 7, 2011

அம்மா வீடு
பொழுது போகாமல் பழைய அவள் விகடன்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது ஒரு புத்தகத்தில் வாசகர் சிறுகதை என்ற தலைப்பில் அம்மா வீடு என்ற ஒரு கதையைப் பார்த்தேன். அட..எப்படி நம்ம கண்ணில் விழாமல் போனது ? என்று எண்ணிய படியே படிக்கத் தொடங்கினேன்..படிக்கப் படிக்க மலைப்பானது.என்னடா இது எல்லா பெண்களுக்குமே இந்த நிலை வரும் போல?என்று நினைத்துக்கொண்டே படித்தேன்.(கதைச் சுருக்கம் இது தான் ...திருமணத்துக்கு முன் அவள் வைத்தது தன சட்டம் என்று எல்லோரும் அவளைசுற்றியே வாழ்கை வட்டத்தை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.திருமணத்துக்குப் பின் ..அவளது அம்மா வீட்டுத் தொடர்பு ஒவ்வொன்றாக துண்டிக்கப் பட்டது.அவளது உரிமைகள் அவளைக் கேட்காமலேயே அவளை கையில் இருந்து எடுக்கப் பட்டன.அப்பா அம்மா வின் செல்ல மகள் அவர்கள் மறைவுக்குப் பின் தன துவைத்த துணிகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் மீண்டும் தான் கொண்டு வந்த பெட்டியில் அவற்றை அடுக்கும் பொது சுட்ட உண்மை வெந்நீர் கோடுகளை கன்னத்தில் வரைந்தன.யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன பையின் ஜிப்பை இழுத்து மூடினாள் கூடவே மனதிற்குள் இருந்த உரிமைக் கனவுகளையும் அழுத்தித் துடைத்தாள்)

   இந்தக் கதையைப் படித்தபின் நிதரிசனமான உண்மைகள் எப்படிச் சுடுகின்றன என்பதை உணர்ந்தேன்?பெண்களுக்கு தாய் வீட்டு உரிமை என்பது இவளவு தானா? நான் தீர்மானம் செய்து விட்டேன். என் மகள் திருமணம் ஆகி கணவன் வீடு சென்றாலும் அவளுடைய அறை எப்போதும் அவளுடையதாகவே இருக்க வேண்டும்....இருக்கும்....

Saturday, October 29, 2011

பருவ மழை
குமுறித் திரண்ட மேகம்
பயந்து மறைந்த சூரியன் 
வெளிச்சம் காட்டிய மின்னல்
இடித்து முழங்கிய இடி 
வெளுத்து வாங்கிய மழை 
மேற்கில் மஞ்சள் வெயில் 
காற்றில் கலைந்த மேகம் 
எட்டிப் பார்த்த சின்ன நிலவு 
நேர்ப் புள்ளியில் ஒற்றை நட்சத்திரம்
மேகத்துக்குள் மறையும் நிலவு
நிலவு துரத்திய மேகச்சிதறல்கள்
இன்பம் துன்பம் மாறி வரும் வாழ்க்கைப் பயணம் 
நினைவுக்கு வந்தது பந்த்ஜி எழுதிய கவிதை

कभी घन में ओझल हो शशि 
फिर शशि में ओझल हो घन
सुख दुख के मधुर मिलन से 
होता जीवन परिपूरण

सुमित्रा नंदन  पंतजी की "सुख दुख " से  

 


Friday, August 5, 2011

பரம்பிக்குளம்
நேற்று மாமாவுடன் பேசினேன்.கருட பஞ்சமி.அம்மாவை நினைத்து மாமா மிகவும் வருத்தத்தில் இருந்தார்.பேச்சு வாக்கில் என் மகன் பரம்பிக்குளம் சென்று எடுத்த போட்டோக்களை facebookil பார்த்து நினைவு ஊஞ்சலை பின்னோக்கி பாய விட்டார்.என்ன ஆச்சரியம்...போட்டோவைப் பார்த்து நான் வியந்த விஷயங்களையே மாமாவும் வியப்புடன் நினைவு கூர்ந்தார்.பரம்பிக்குளம்...என் இளமைக் கால விடுமுறைக் கொண்டாட்டங்களுடன் கழித்த இடம்.ஊட்டியோ....கொடைக்கானலோ ....பார்க்கவேண்டும் என்ற சின்ன ஆசையைக் கூட என் மனதில் தோன்றச் செய்யாத இடம் ..எங்களின் கோடை வாசஸ்தலம்....யானைகளும் கரடிகளும் மான்களும் ...இயற்கையுடன் மக்கள் வாழ்ந்த அந்த அணைக்கட்டுப் பகுதி...பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து எப்போதோ ஒரு முறை வரும் பஸ்சில் பயணப்பட்டு, கொண்டை ஊசி வளைவுகளை பயத்துடன் ஒற்றைக்கண்ணால் ......பார்த்து அப்பாடா.....எப்போது வரும் என்று பஸ் திரும்பி நின்றவுடன் இறங்கி மேடு பள்ளங்களை ....ஏறி இறங்கி ...தாத்தா, மாமா அத்தை, என்று சந்தோசப்பட்ட அந்த காலங்கள் இனி வருமா? நினைவு வரிகள் ஓட .....கனவுக்கட்சிகளை  ரிவைண்ட் செய்து பார்த்து மகிழத் தான் வேண்டும்.....

Wednesday, March 30, 2011

சொந்தமில்லை பந்தமில்லை 

பழைய பாடல் தொகுப்பில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்ட அன்னக்கிளி படப் பாடல்.
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ...
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில் 
அக்கக்கோ   ..எனும் பாடல் ..அது தானே ....


மனம் கனக்கிறது
ஒற்றை பறவையின் குரல் கேட்கும் போதெல்லாம் இநத பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.


Wednesday, February 2, 2011

நண்பன்டா ....

நான் போட்ட மோர் மிளகாய்
நட்பின் இலக்கணம் உணர்த்தியது
பச்சை பசேல் என்ற கார மிளகாய்
வெள்ளை வெளேரென்ற தயிருடன் உடன்படிக்கை.
முதல் நாள் தனியே தெரிந்தது
மிளகாயும் தயிரும்..
நான் வேறு நீ வேறு ..
ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை.போலும்.
ஆனாலும் பச்சையும் வெள்ளையும் அழகு தான்...
அடுத்தநாள் கொஞ்சம் நிறம் மாற்றம்...
சூரியன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தான் போலும்
இடைத்தரகன் நல்லாவே வேலை செய்தான்
கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கலர் மாறியது.
நானும் கூடவே வருகிறேன் என்ற வெயிலின் சூடு
மிளகாயை நிறம் மாற்றி விட்டது.
காய்ந்தபின் பொறித்தால் ......
அடடா.....என்ன சொல்வது.....
குணமும் மாறி விட்டது....
மிளகாயின் காரம் போன இடம் தெரியவில்லை.
கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் உப்பு,கொஞ்சம் காரம்,
இப்படி நிறம் மணம்,குணம் எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டது.
எனக்கு நினைவுக்கு வந்தது என்னவோ
ரஹீமின் கவிதை தான்..
நட்பு இருவரின் குணா திசயங்களும் கலந்த
புது குணம் தோற்றுவிக்கும்
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் கிடைக்கும்
நலங்கு சிவப்பு போல...





































Sunday, January 2, 2011

கொல்லூர் பயணம்
மழை சாரலுடன் தொடங்கியது...கொல்லூர் நெருங்க நெருங்க மழையின் சீற்றம் அதிகமாகியது...நேராக சௌபர்ணிகா கரையை நோக்கி சென்றது சிற்றுந்து...மழையின் சீற்றமும் அதிகம் ஆற்றின் நீரின் வேகமும் அதிகம்...குளிக்க இடம் தேடி மழையில் அலைந்தோம்...மாமாவின் இன்னொரு பொய்....நிஜமாகவே பொய் ஆனது.உடைமாற்றும் இடம் இல்லாததால் நாங்கள் பயணம் செய்த அந்த வண்டி எங்கள் கிரீன் ரூம் ஆனது.டிரைவருக்கு ஒரே கோபம்.வண்டியை நாஸ்தி பண்ணி விட்டோம்.ஏதோ ஒரு மாதிரி டிரஸ் செய்து கொண்டு கோவில் நோக்கி பயணம்..மழையின் வேகம் இன்னும் அதிகரித்தது...எங்கும் மலையாள வாடை...கர்நாடக கோவில் ...மலையாள முறைப்படி தான் வழிபாடு ..பார் பார் பட்டினம் பார் என்று கண்காட்சி பார்ப்பது போல கோவில் பார்த்து விட்டு (ஆமாம் கோவில் தான் பார்த்தோம் அம்மன் தரிசனம் மனம் ஈர்க்க வில்லை)  ஓட்டல் தேடினோம்..என்னமோ சப்பாத்தி என்று ஒரு வரட்டி..... சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டு மழையில் நனைந்து கொண்டே உடுப்பி நோக்கி பயணம் துவங்கியது...