Monday, October 11, 2010

நவராத்திரி  ..கொலு  
ஒவ்வொரு வருஷமும் வரும் கொலு இந்த வருடமும் வந்தது...முதலில் வைக்கலாமா வேண்டாமா ...என்று தயங்கி பிறகு வைத்து விட்டேன்...புதிய பொம்மை ஒன்றும் இல்லை.ஆனால் கொலு வைக்கும் போது ஏன் நினைவுகூடங்களில் வியாபித்து நின்றது கோமள விலாசில் வைத்த கொலு...
கோமள விலாசுக்குக் குடி போனபோது ஒரு சந்தோஷம் ..பெரிய ஹால்.எங்கள் வீட்டில் நிறைய்ய்ய்ய .....பொம்மைகள்..சின்ன சின்ன வீடுகளில் இருந்தபோது கூட அம்மாவும் அப்பாவும் பதினோரு படிகளுக்கு குறைவாக வைத்தது இல்லை.கோமள விலாசில் இன்னொரு advantage  அவர்கள் வீட்டு ரெடிமேடு கொலுப்படி எங்களுக்கு கிடைத்தது.பட்டு மாமி காலி  செய்து போனபிறகு சும்மாவே கிடந்த கொலுப்படி எங்களுக்கு உபயோகித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.கிரேட்.....அப்பா வழக்கம் போல மாணவச் செல்வங்களின் துணை கொண்டு nut  ..bolt  cutting player  துணை கொண்டு அந்த இருபது ஒரு படி கொண்ட stand செட் செய்து விட்டார்.அம்மாடியோவ்....கூரையில் இருந்து முட்டிக்கொண்டு நின்றது ....கொலுப் பெட்டிகள் திறக்கப் பட்டன.பழைய ...கிழிந்த ...துணிகளுக்குள் அடைந்து கிடந்த பொம்மைகள் புதுக் காற்றை சுவாசித்தன.அப்பா ஏணி துணை கொண்டு பொம்மைகளை அடுக்கினார்...உடன் வானரப் படைகள்....சுப்பிரமணி, வேலுச்சாமி, அப்புறம் நரசிம்மன்...எல்லோரும் அவர் அவர் கற்பனைக்கு  ஏற்ப பொம்மைகளை அடுக்கி முடித்தோம் .மணி இரவு பன்னிரண்டு இருக்கும் ....பொம்மைகளை அடுக்கி தனியே நின்று அவ்வளவு பெரிய கொலுவை மலைப்பும் திகைப்பும் சந்தோஷமுமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பழைய கொளுச்டந்து பாரம் தங்காமல் இடையில் எங்கோ முறிய.....அந்த பிரம்மாண்ட கொலு எங்கள் கண் முன்னால் தட தட என்று சரிந்தது....என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம்....ஆனால் ஆச்சரியம் ....என்ன தெரியுமா...அவ்வளவு உயரத்தில் இருந்து சரிந்தும் சேதமடைந்த பொம்மைகளின் எண்ணிக்கை குறைவு தான் .அம்மாவுடைய பலப் பல கிருஷ்ணன் பெரியது உடைந்து விட்டது...சிறிய பொம்மை இருக்கிறது...
இப்போது நான் வைக்கும் போதும் அந்தக் காட்சி கண்ணில் படமாய் ஓடுகிறது.
அம்மா சளைக்கவில்லை அந்த ஸ்டாண்டை எடுத்து வைத்து விட்டு பழையபடி drum .டின்,புஸ்தகங்கள் சாமான்அடுக்கும் பலகை கொண்டு பழைய படி பதினோரு படி கொலு உருவாகி விட்டது...அப்போது அம்மா மீது கோபம் வந்தது,,,இப்போது அம்மாவின் வில் பவர் புரிகிறது அம்மா u are  great !

3 comments:

  1. Excellent, Geetha! You have been lucky to spend more time with Amma.

    ReplyDelete
    Replies
    1. சித்தி எதற்கும் சளைத்தவர் அல்ல.வேணும் அவர் ஆசீர்வாதங்கள்

      Delete
  2. சித்தி எதற்கும் சளைத்தவர் அல்ல.வேணும் அவர் ஆசீர்வாதங்கள்

    ReplyDelete