Monday, February 15, 2010

அழுத்தம்  வெல்வீர்......!
நண்பர்காள்......
யாரென்று பார்க்கிறீர்களா .......நான்...தான்....
என்ன தெரியவில்லையா.....?
நான் தான் உங்கள் நலம் விரும்பி... பேசுகிறேன்.
சற்று செவி மடலை என் பக்கம் சாய்ப்பீர்...........
உங்களுள் அழுத்தம்.....அழுத்தம்.....சரியா...?
என்ன எனக்கா   ?அழுத்தமா...?
பதற்றம் வேண்டாம்....நண்பரே...
நீங்கள் கவனம் சிதறி விட்டீர்கள்.என்ன ? சரியா ?
என்ன?.....கவனச் சிதறலா   ........?எனக்கா...?
ஏன் கேட்கமாட்டீர்கள்......?
உங்கள் குழப்பம் ...மன எரிச்சல்....வார்த்தை விபரீதம் ,
பார்த்தீர்களா.......பார்த்தீர்களா.......
தனிமனித உறவு கேட்டு விட்டதே....
மற்றவர்கள் ஒத்துழையாமை இயக்கம்
ஆரம்பித்து விட்டார்கள்....அடடா.....
சிக்கல்கள் சூழ்ந்தன.
இரத்த அழுத்த மானியில்
மெர்குரியின் அளவு
மேலும் கீழுமாக ......தவிக்கிறதே.....
அதோ மெல்ல நினைவு கரைகிறதே...
மருத்துவமனை..... டெட்டால் வாசனை....
படுக்கை...டாக்டர்கள் ....
மருந்து...மாத்திரை,,,மயக்கம்....
ஆழ்ந்த இழுத்து விட்ட மூச்சு....
நிம்மதியான   ஆழ்நிலை மயக்கம்....
அப்பாடா...தெளிந்து விட்டீர்கள்.
புரிந்ததா...சூழ்நிலைப் புரிதல் அவசியம்.
அதி அவசியம்.
கருத்துப் பரிமாற்றம் ....தேவை.
மிக மிகத் தேவை.
என்ன வேலை சுலபமாகிவிட்டது  இல்லையா....
பாராட்டுக்கள்...மேன்மையான பாராட்டுக்கள்.
மகிழ்ச்சியா நண்பரே......
அழுத்தம் வெல்வீர்.......
மன அழுத்தம் வெல்வீர்......
இது உபதேசமல்ல....
முன்னெச்சரிக்கை வாதம்
அதோ..இன்று அதே அழுத்தம் என்னையும்
தொடருகிறது.
இது ஒரு தொடர் நிகழ்காலம்,
புரிதல் இருந்தால்
அழுத்தக் கடலை அனுமன் போலத்
தாண்டி...விடலாம்.
என்ன நண்பரே....தயார......தானே...
களம் இறங்குங்கள்.
வெல்வீர்.......அழுத்தம்...வெல்வீர்.


இந்தக் கவிதையின் வேர் ஒரு காவல்துறை அதிகாரியின் உரை.ஆங்கில உரையை என்னிடம் கொடுத்து தமிழாக்கம் செய்துத் தரச் சொன்னார்கள்.என் கற்பனையும் சேர்ந்து கொண்டது.அந்த அதிகாரிக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு மழை.எனக்கும் சந்தோஷம்.உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1 comment:

  1. மிகவும் அருமை! அவ்வளவும் உண்மை! தொடர்க!
    அன்புடன்,
    ரமா

    ReplyDelete