Wednesday, February 24, 2010

நானும் அப்பாவும்
அப்பா எல்லோருக்கும் போல ஒரு அன்பான அப்பா .என் செல்ல அப்பா.எனக்குச் செல்லம் கொடுதததினால் அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்கிய அப்பா.நான் படிக்கமாட்டேன் என்று சொன்னதினால் என்னை ஹிந்தி படிக்கவேண்டாம் என்று சொன்ன அப்பா. (ஆனால் பின்னால் அதே ஹிந்தி என் வாழ்வின் ஆதாரம் ஆனது வேறு கதை.
அப்பாவின் ஹிந்தி வகுப்புகள் இன்று எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஹிந்தி நோட்ஸ் எழுதி கடைசியில் ஒரு தாமரைப்பூ இரண்டு இலைகள் வரைவார்.அதை நானும் செய்தேன்.
பாட்டு கிளாஸ்     நான் அப்பாவை மிகவும் சோதித்த வகுப்பு.எனக்கே நினைவே இல்லை.நான் எதனை முறை பாட்டு கற்க ஆரம்பித்தேன்  என்று.ஜண்டை வரிசை வரை சில சமயம் போகும் சில முறை ஸ்வரஜதி வரை....சில தடவை வர்ணம்   .....ஆனால் நான் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை.
சரி விட்டது ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று பாட்டுக்கு டாட்டா சொல்லி வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.பாவம்......அப்பா பாண்டமங்கலம் வரை சைக்கிளில் கூடிக் கொண்டு போவர்.ம்ம்ம்ம்ம்ம்        அதுவும் ..பாதியில் நின்றது.....
சோ இப்போ......எனக்கு எதுவும் முழுதும் தெரியாது.அதே சமயம் குறை கண்டுபிடிக்க மட்டும் தெரிந்து விட்டது. ....சரியான வாத்தியார் புத்தி........அப்புறம்......நான் முழுவதுமாக கற்றது பரத நாட்டியம் தான் .அது.....ஒரு பெரிய தொடரும் போட்டு எழுத் வேண்டிய கதை.....சோ ....(தொடரும்)

No comments:

Post a Comment