Friday, March 5, 2010

வேலூர் மாரியம்மன் தேர்த் திருவிழா
இன்று குரு கோனியம்மன் தேர் புகைப்படம் facebook ஆல்பம் மூலமாக அனுப்பி இருந்தான். என் நினைவோடை பின்னோக்கிப் பாய ஆரம்பித்து விட்டது. இளமைக் கால தேர்த் திருவிழா........அழியாத கோலங்கள். வேலூர் மாரியம்மன் தேர் திருவிழா கனவுத் திருவிழா. வளர்ந்த கிராமமான வேலூரின் ஸ்பெஷல் விழா .அக்கம் பக்கத்தில் எந்த மாரியம்மன் கோவிலிலும் தேர் கிடையாது.கிழக்குத் தெருவில் உள்ள தேர்முட்டிக்கு செல்வதே ஒரு பெரிய விஷயம். என் தோழி மங்கையின் வீட்டுக்குப் பக்கத்தில் தேர்முட்டி.அவள் வீட்டுக்குப் போகும் சாக்கில் தேரைப் பார்த்தவிட்டு வருவேன்.ஏனோ அலங்காரம் பண்ணாத மரத் தேரின் மீது ஒரு காதல்.
அனேகமாக முழு ஆண்டுத் தேர்வுக்குத் சில நாட்கள் இருக்கும் போது தான் தேர் வரும்.
கோவில் ஆக்ராஹாரத்தின்  பக்கத்தில் தான்.அப்பா வீட்டில் அதிகம் சினிமா பாட்டுக்கேட்க விடமாட்டார்.ரேடியோ இருந்தது.ஆனால் ஞாயிற்றுக் கிழமை மதியம் நீங்கள் கேட்டவை தான் ஒரே வழி.(அப்படியும் பாட்டு மியூசிக் ஆரம்பிக்கும் போதே என்ன பாட்டு என்று சரியாகக் கூறிவிடுவேன்).எனவே தேர்த் திருவிழாவின் போது மைக் செட் கட்டி எல்லாப் பாட்டும் கேட்கலாம் என்பதால் எப்போதும் படிப்பதற்கு அதிகம் கஷ்டப்படாத நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்பீக்கர் சத்தம் நன்றாக கேட்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விடுவேன்.பத்து நாட்களும் திருவிழா தான்.பள்ளிக்கூடத்தில் சினிமா பாட்டுப்புஸ்தகம் கைமாறி வரும் பாடல் வரிகள் மனதில் ஏறிக்கொள்ளும்.(என்னுடைய பெரிய குறை என்னால்  மனப்பாடம் செய்ய முடியாது.ஆனால் சினிமாப் பாடல் வரிகள் ஒரு  தடவைக் கேட்டால் அப்படியே பதிந்து விடும்  .......இன்றும் மாணவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.என் இந்த கல்வி இலாக்கா சினிமா மூலமாக பாடம்நடத்தக் கூடாது.)
காப்பு கட்டிய பின் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றப் போவேன்.வாய்க்காலில் தண்ணீர் இருக்காது.காவேரிக்குப் போய் கொண்டு வந்து ஊற்றுவேன்.இதற்கு எல்லாம் ஒன்றும் சொல்லாத் அப்பா தேர் இழுக்கப் போனால் மட்டும் திட்டுவார்.தேர் இழுப்பவர்கள் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டுவார்கள்.அப்பாவுக்குத் தெரியாமல் தேர் இழுக்கப் போனால் நனைந்த டிரஸ் காட்டிக் கொடுத்து விடும். பிறகு என்ன ?அர்ச்சனைதான்.மாலையில் தேர்க் கடை உலா.எப்படியும் இரண்டு ரிப்பன் கொஞ்சம் வளையல் ஸ்ரீதருக்கு பந்து என்று ஒரு பத்து ருபாய் செலவு வைத்து விடுவோம்.கோணபுளியங்கை ,கலர் ஐஸ் ராட்டினம்............நான் விளையடுகிறோனோஇல்லையோ கண்டிப்பாக வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவேன்.என் friends ராட்டினத்தில் விளையாடும் போது பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பேன்.கர்சிப் கீழே வைத்து விட்டு அடுத்த சுற்று வரும் போது எடுக்கும் என் தோழிகள் எனக்கு பெரிய வீராங்கனைகள் தான்.இத்தனை விஷயங்களுக்கும் என்னுடன் துணைக்கு வருவது யார் தெரியுமா.....என் தோழி ராதா.

No comments:

Post a Comment