Sunday, May 30, 2010

ஆகாயவிமானம்  விபத்துக்குள்ளான செய்தி வயிற்றுக்குள் சிலீரென்று ஒரு அதிர்வு அலையை ஏற்படுத்தி விட்டது.மனம் கனத்துக் கிடந்தது.மேலும் கனமாக்கியது ஹிந்துவில் வந்த அந்த போட்டோ.ஏதும் அறியாப் பருவத்திலே உடல் தந்த உயிர் தந்த உறவுகள் காணாமல் போன அதிர்ச்சி அந்த சின்னக் கண்களுக்குள் என்ன ஆழமாய் தெரிகின்றன.?ஆண்டவன் என்ன நினைத்து அந்தக் குழந்தையின் வாழ்கையில் விளையாடி விட்டான் தெரியவில்லை.
அரை நூற்றாண்டு காலம் அம்மா அப்பாவுடன் வாழ்ந்து நமக்கு என்று கணவன் குழந்தை என்று தனி உலகம் வந்த பின்னும் கூட இதோ எட்டு மதங்களுக்கு முன் அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் போன பிறகு ஒரு வெறுமைப் பள்ளம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே.!
ஆண்டவா ! அந்த தளிரின் வாழ்வை வளமாக்கு.

No comments:

Post a Comment