Friday, July 30, 2010

மழை  மழை
நடுவில் நின்று போய் இருந்த மழை சாரல் ஊர்வலம் நேற்று மீண்டும் எட்டிப் பார்த்தது.கலையில் இருந்து வீரிட்டுக்கொண்டு இருந்த தென்னங்காற்று மதியம் ஒய்வு எடுத்துக் கொண்டது.சரி ஜன்னலைத் திறக்கலாம் என்று திறந்தால் வெள்ளி சரிகைத் தூரலாய் மழை சிலிர்த்துக் கொண்டு தூறிக்கொண்டு இருந்தது.அகல விரிய ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டேன்.ஒரு சிலிர்ப்பான குளிர் தோலை ஊடுருவிக்கொண்டு மயிர்க் கால்களைக் குத்திட்டு நிற்க வைத்தது.வெளியே போகும் போது பெயருக்குக் குடை எடுத்துக் கொண்டு சாரல் மழையில் நனைந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நனைந்த மரங்களும் காற்றில் நடுங்கி என்னை நனைத்தன.அப்பா....எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மழை குளியல்,இரவில் வரும் அடுக்குத் தும்மலை மறந்து விட்டு நனைந்தேன்.........அருமை......அருமை......

No comments:

Post a Comment