Friday, August 5, 2011

பரம்பிக்குளம்
நேற்று மாமாவுடன் பேசினேன்.கருட பஞ்சமி.அம்மாவை நினைத்து மாமா மிகவும் வருத்தத்தில் இருந்தார்.பேச்சு வாக்கில் என் மகன் பரம்பிக்குளம் சென்று எடுத்த போட்டோக்களை facebookil பார்த்து நினைவு ஊஞ்சலை பின்னோக்கி பாய விட்டார்.என்ன ஆச்சரியம்...போட்டோவைப் பார்த்து நான் வியந்த விஷயங்களையே மாமாவும் வியப்புடன் நினைவு கூர்ந்தார்.பரம்பிக்குளம்...என் இளமைக் கால விடுமுறைக் கொண்டாட்டங்களுடன் கழித்த இடம்.ஊட்டியோ....கொடைக்கானலோ ....பார்க்கவேண்டும் என்ற சின்ன ஆசையைக் கூட என் மனதில் தோன்றச் செய்யாத இடம் ..எங்களின் கோடை வாசஸ்தலம்....யானைகளும் கரடிகளும் மான்களும் ...இயற்கையுடன் மக்கள் வாழ்ந்த அந்த அணைக்கட்டுப் பகுதி...பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து எப்போதோ ஒரு முறை வரும் பஸ்சில் பயணப்பட்டு, கொண்டை ஊசி வளைவுகளை பயத்துடன் ஒற்றைக்கண்ணால் ......பார்த்து அப்பாடா.....எப்போது வரும் என்று பஸ் திரும்பி நின்றவுடன் இறங்கி மேடு பள்ளங்களை ....ஏறி இறங்கி ...தாத்தா, மாமா அத்தை, என்று சந்தோசப்பட்ட அந்த காலங்கள் இனி வருமா? நினைவு வரிகள் ஓட .....கனவுக்கட்சிகளை  ரிவைண்ட் செய்து பார்த்து மகிழத் தான் வேண்டும்.....

No comments:

Post a Comment