Thursday, April 3, 2014

VG ரஹீமின் வைர வரிகள் என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு நான் தேர்வுக்கு தேவையானவற்றை மட்டும் சொல்லிக் கொடுப்பேன்.இந்த முறை தேர்வு எழுதும் மாணவி எல்லா பாடல்களையும் சொல்லிக் கொடுங்கள் என்றாள்.நானும் படித்து சொல்லிக் கொடுக்கிறேன்.என்று படித்தேன். அற்புதமான செய்திகள் உதாரணத்திற்கு இரண்டு தோஹேகள் . टूटे सुजन मनाइये,जो टूटे सौ बार। रहिमन फिरी फिरी पोहिए,टूटे मुक्ता हार।। பொருள் நம்முடைய நடவடிக்கைகளால் கோபபட்டு விலகி நிற்கும் நல்ல நண்பர்களை நூறு முறை ஆனாலும் சரி,வேண்டி மன்னிப்பு கேட்டு அந்த நட்பை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.ஏனெனில் நல்ல நட்பு விலை மதிக்க முடியாத முத்து மாலையைப் போன்றது.அது எவ்வளவு முறை அறுந்தாலும் முடிச்சு ப்போட்டு பத்திரப படுத்துவோமல்லவா?அது போலத் தான் நல்லவரின் நட்பும். இரணடாவது தோஹா बिगरी बात बने नहीं,लाख करै किन काय। रहिमन फाटे ढूध को,मथैन माखन होय।। பொருள் எப்படி திரிந்த பாலை லட்சம் முறை கடைந்தாலும் வெண்ணை கிடைக்காதோ,அதே போல் கடுஞ்சொற்களால் உடைந்த மனதை ஒட்ட வைக்க முடியாது. -- Sent from Fast notepad

No comments:

Post a Comment