Tuesday, April 1, 2014

மனிதர்களின் நிறங்கள்

அனுபவம் பேசுகிறது இன்று மாலை வாக்கிங் போகும் போது நீண்ட நாள் பழகிய ஓருவரை அவரது வீட்டு வாசலில் பார்த்தேன்.அவர் சமீபத்தில் இலங்கையில் ராமாயணம சம்பந்த பட்ட இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று திரும்பியிருந்தார்.அவரது கணவர் சில நாட்களுக்கு முன் பார்த்த போது சொன்னார்.சரி நேரில் பார்த்த பிறகு விசாரிக்க வில்லை என்று நினைத்துக் கொள்வார்களே என்று எண்ணி பயணம் பற்றி விசாரித்தேன்.விபரமாக எல்லாம் கூறியவர் நீங்களும் போய் பார்த்து விட்டு வாருங்கள் என்றும் கூறினார்.பிறகு போய் வருகிறேன் என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தேன்.என்ன நினைத்தாரோ அந்த மாமி என் காலடியின் கீழ் இருநத மண்ணை ஒரு பிடி வாரி க்கொண்டு உள்ளே போனார்.அதைப் பார்த்ததும் என் மனம் பதைத்துப் போயிற்று.கோவிலுக்குப் போயும் மனம் இறைவனை நாட வில்லை. இறைவா இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.மனம் கனத்துப் போய் விட்டது. -- Sent from Fast notepad

No comments:

Post a Comment