Saturday, October 29, 2011

பருவ மழை
குமுறித் திரண்ட மேகம்
பயந்து மறைந்த சூரியன் 
வெளிச்சம் காட்டிய மின்னல்
இடித்து முழங்கிய இடி 
வெளுத்து வாங்கிய மழை 
மேற்கில் மஞ்சள் வெயில் 
காற்றில் கலைந்த மேகம் 
எட்டிப் பார்த்த சின்ன நிலவு 
நேர்ப் புள்ளியில் ஒற்றை நட்சத்திரம்
மேகத்துக்குள் மறையும் நிலவு
நிலவு துரத்திய மேகச்சிதறல்கள்
இன்பம் துன்பம் மாறி வரும் வாழ்க்கைப் பயணம் 
நினைவுக்கு வந்தது பந்த்ஜி எழுதிய கவிதை

कभी घन में ओझल हो शशि 
फिर शशि में ओझल हो घन
सुख दुख के मधुर मिलन से 
होता जीवन परिपूरण

सुमित्रा नंदन  पंतजी की "सुख दुख " से  

 


2 comments:

  1. உன் கவிதை அருமை. पंतजी யின் கவிதை எவ்வளவு உண்மை! நன்றாகத் தெரிந்தது கூட அடிக்கடி மறந்து விடுகிறது. சில கவிதைகள் அப்படியே மாறாமல் இருந்தாலும் நாம் வளர வளர அவைகள் கொடுக்கும் பொருள் ஆழமாகிக்கொண்டே போகிறது. இன்னும் நிறைய எழுது. எழுதியவுடன் எனக்கு ஒரு மெயில் அனுப்பு.

    ReplyDelete
  2. மிகவும் அருமை...
    துன்பமும்
    இன்பமும் ...
    இரு சக்கரமாய் சுழல
    வாழ்கை வண்டி ....
    सुख और दुख का मधुर मिलन है यह जीवन .... सच की बात है...

    ReplyDelete